Wednesday, February 17, 2010

சின்னம்

 

காதல் எங்குள்ளது என்று கேட்டால் ?

இதயம் என்கிறான் !

அந்த இதயத்தையே அம்பெய்தி கொன்றுவிட்டு 

பின்பு காதலை இவன் எங்கிருந்து 

உணரப் போகிறான் ! 

- அரவிந்த்


Tuesday, February 16, 2010

காதலர் தினம்


காதலர் தினம் என்றால் அன்று மட்டும் தான் காதலிப்பீர்களா ?
அல்ல
அன்று மட்டும் தான் அன்பு பாராட்டுவீர்களா ?

என்று கேட்பதோ / சொல்வதோ அறியாமை.

நாம் என்ன பொங்கல் அன்று மட்டும் தான் பொங்கல் சாப்பிடுகிறோமா ?
அல்ல 
தீபாவளி அன்று மட்டும் தான் விளக்கேற்றுகிறோமா ?

அவ்வளவு ஏன் ... 
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருப்பதாக 'கூறப்படும்' 
அந்த கடவுளுக்கே !
பொதுவாக சிறப்பிப்பதர்க்கு கோவில்கள் தேவைப்படுமாயின் 
அந்த கடவுளுக்கே !
உருவமும், பெயரும் கொடுத்த 
இந்த மனிதர்களின் உயரிய உன்னத உணர்ச்சியான "காதலுக்கு" !

ஏன் சிறப்பிக்க ஒரு நாள் இருக்கக்கூடாது ?
- அரவிந்த்


அழகு

 

ஆணுக்கு அழகு வீரம் என்றார்கள் 

பெண்ணுக்கு அழகு நாணம் என்றார்கள் 

மதிக்கு அழகு வெண்மை என்றார்கள் 

அன்னத்திற்கு அழகு நடை என்றார்கள் 

ஆதவனுக்கு அழகு ஒளி என்றார்கள் 

உறவினுள் அழகு தாய்மை என்றார்கள் 

இந்த காதலுக்கு அழகு தான் என்ன ?

                . . . . . . . தெய்வீகம் தானோ !

- அரவிந்த்