Thursday, December 2, 2010

உத்தமனாகிய நான்


உத்தமனாகிய நான் !
-------------------------------------

சில  நேரங்களில்  சில  மனிதர்கள் 

சிற்சில  எண்ணங்களுடன்
 பற்பல  முறைகளில்  கதைக்கையில்,
 கதை  என்ற  ஒன்றும்  நிஜமாகிப்போகுதடா !
அதிலே  பல  உண்மைகளும்  செத்து  வீழ்குதடா !
இதுவென்று அதுவென்று யான் சொல்லல் ஆகுமோ !
இதன்று அது என்று சொல்லிவிட்டால் வாழுமோ !
கனவென்ற ஒன்று காற்றில் மிதக்காவிட்டலும்,
கண்ணீரில் மிதக்காதோ ?
அதை துடைக்கும் கரங்கள் எனை வந்து சேராதோ ?


- அரவிந்த் நாராயணன்


Friday, October 1, 2010

முற்றுபுள்ளி



எண்ணிய எழுத்துக்களை கவிதையாக

வரைந்தேன், கண்களுக்கு அது ஓவியமானது..

படித்தேன், காதுகளுக்கு அது இசையானது..

உணர்ந்தேன், எண்ணங்களுக்கு ஒரு உணருதல் கிடைத்தது..

பாடினேன், மெய் சிலிர்த்தது..

இவை அனைத்தையும் அவளிடமிருந்து கண்ட நான்..

உருகிப்போய் எனது எழுத்துகளின் ஓரத்தில் நின்றேன் 

முற்றுபுள்ளியாய் !
- அரவிந்த் நாராயணன்


Friday, July 30, 2010

கரைச்சல்


காகம் கரைகையில்
கரைந்து போய்
வாசலைப் பார்த்தேன் 
என் கண்கள் 
தான் கரைந்தன 
கதவுகள் கரையவில்லை !

- அரவிந்த் நாராயணன்


Wednesday, June 9, 2010

தமிழ்ப்பால்



தாய்க்கு பிறந்தவர்கள் 
தாய்மொழியில் பேசினால் 
நகைக்கிறார்கள் . . .

அன்று சின்னஞ்சிறு வயதில்
குடித்தாயடா உனது தமிழ்ப்பாலை 
இன்று அது உனக்கு புறை யேரிக்கூட
போகவில்லையா ?
- அரவிந்த் நாராயணன்


Monday, May 24, 2010

விரலி (USB Drive)


சொடுக்கி விட்ட கோப்புகளை 

சொடுக்கத்தான் செருகிவிட்டேன்

பற்றிக்கொண்டது என் கணிப்பொறியை 

தன் காதலன் கிடைத்துவிட்டா னென்று !

- அரவிந்த் நாராயணன்


Sunday, May 23, 2010

திரை


இளங்காலைப் பொழுதாம் . . .
தரை மீது 
வந்தது எனது நிலவு !
 படம் எடுத்துக்கொண்டேன் 
மனம் எனும் திரையில் !!!
- அரவிந்த் நாராயணன்


Sunday, May 9, 2010

சுதந்திரம்


என்று பார்பனன் ஒழியரானோ,
என்று காங்கிரேச போட்டு தள்ளுராங்கலோ,
என்று இஸ்லாம் கிறித்துவ மதங்களை அடித்து வெளியேற்றுகிறார்களோ,
என்று ஜாதிகள் இல்லாமல் ஒழியுதோ,
முன்னோர்கள் என்றும் இலக்கியங்கள் என்றும் பழமையை மட்டுமே பேசாமல் எதிர்காலத்தை பற்றிய சிந்தனைகள் தோன்றுகின்றதோ,
என்று பெற்றோர்கள் பிள்ளைகளை சுயமாக சிந்திக்க விடுகிறார்களோ,
அன்பு என்ற பெயரிலும், தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற பெயரிலும் பிள்ளைகளின் வாழ்கையின் ஆதிக்கம் செலுத்துவதை தவிர்க்கிறார்களோ,
அன்று ஒத்துகொள்கிறோம் இந்தியாவுக்கு சுதந்திரம் 
கிடைத்துவிட்டது என்று . . .
 - அரவிந்த் நாராயணன்


Friday, April 23, 2010

கனவுகள்


விடிய விடிய கனவுகள் 

வேண்டி யாசித்தேன் -அவளிடம் 

உன் உறக்கமே நான் தானடா 

என நகைக்கிறாள் என்னவள் 

- அரவிந்த் நாராயணன்


Thursday, April 8, 2010

தொலைபேசி


என் தொலைபேசியில் இருக்கும் 

எண்கள் அனைத்தும் தேய்ந்து விட்டன 

உன்னை அழைக்கும் அந்த 

எண்களைத் தேடி இவை 

அனைத்தையும் நான் தழுவியதில் !

- அரவிந்த் நாராயணன்


Friday, March 26, 2010

பின்னூட்டம் - 1 ( காதலுக்காக)

காதலுக்காக - இந்த கடிதத்தை எனக்கு எழுத அந்த நண்பரை தூண்டிய எனது எழுத்துக்கள்.

 யாரோ ஒரு நண்பர் என் மனசாட்சிக்கு குரல் கொடுத்திருக்கிறார் ! உங்களது விமர்சனங்கள் தான் எனது பேனாவின் மை என்று நான் கூறிய போதிலும், ஓரிரு விமர்சனங்களைத் தவிர எனது எழுத்துக்களுக்கு அவ்வளவாக விமர்சனங்கள் வந்ததில்லை . ஆனால் முதல் முறை இந்த பெயர் குறிப்பிட விருப்பமில்லாத நண்பர் அவர் மனதிலிருந்து அவருடைய மனசாட்சி அவருடன் எனது எழுத்துக்களைப் பற்றி பேசியதை, எனக்கு எனது மனசாட்சி என்று குறியிட்டு அனுப்பிவைத்துள்ளார் ...
அவரது கருத்தை நான் மதிக்கிறேன், உண்மையிலேயே மிக தீவிரமான தமிழ்ப்பற்று கொண்டவர் போல் தெரிகிறது. எனது எழுத்துக்கள் அவரை எந்த அளவு தாக்கி இருக்கிறது என்பது அவரது கோவமான கடுமையான சொற்களிலேயே தெளிவாக புலப்படுகிறது. 

சரி, அவரது கேள்விகளுக்கு சில பதில்கள் அளித்துவிட்டு மேலும் பார்ப்போம்.

Dai,
Naan than un manasaatchi pesaren. Un manasula enna than nenachitu irukka?? goyyale kavithai elutharenu yen ippadi kaluthai mathiri kanachittu irukka.. ithuku 4 velaiyattha loosu pasanga vera support!!

என் மனசாட்சி இதுவரை என்னிடம் இப்படி எதுவுமே கூறியதில்லையே. வேண்டுமெனில் இது உங்களது மனசாட்சி உங்களிடம் பேசியது என்று எடுத்துக்கொள்வோமாக! அதுவே சரி என்றும் தோன்றுகிறது. ஏனெனில் எனது மனசாட்சி இப்படித்தான் நினைக்கிறது என்றால் நான் இந்த இடுகைப்பதிவை தொடங்கியே இருந்து இருக்கமாட்டேன்.
எனது "பின் குறிப்பு" தாங்கள் சரியாக படிக்கவில்லை போலும். கொஞ்சம் இந்த பக்கத்தை முழுவதுமாக கீழே இழுத்து படித்து பார்க்கவும். எனது எழுத்துக்கள் அனைத்தும் கவிதையே அன்றி கவிதையைத் தவிர வேறொன்றும் இல்லை என்று நான் எங்குமே பிரகடனம் செய்யவில்லையே. மேலும் எனது எழுத்துக்கள் கவிதை நடையில் இல்லாமலும் இருக்கக்கூடும் என்று தெளிவாகத்தானே சொல்லி இருக்கிறேன். 
இந்த எழுத்துக்கள் அனைத்தும், இன்று இப்பொழுது நன்கு பக்குவப்பட்ட வயதில் நான் எழுதியவை அல்ல. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் எட்டாம் வகுப்பு படித்த காலங்களில் எழுதியவை. அன்று  நான் ஒரு தமிழ் மேதையல்ல ஒரு சராசரி மாணவன் தான்.. இவனிடமிருந்து கண்ணதாசனோ அல்லது வைரமுத்து வரிகளையா எதிர்பார்க்க முடியும் ? 

கவிதைகளை கவிதைகளாகவே எழுதவேண்டும் என்றும் அதற்க்கு ஒரு தமிழறிஞ்சராகத்தான் இருக்கவேண்டும் என்றும், மேலும் அதற்க்கு தமிழில் முதுகலைப்பட்டம் வரையாவது படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று நீங்கள் கருதினால். ஒத்துக்கொள்கிறேன் எனது எழுத்துக்கள் கழுதையின் கினைப்பே. 
இருந்துவிட்டு போகட்டும், நான் கழுதை எனது எழுத்துக்கள் அவற்றின் கிணைப்பு என்றால் அவை தமிழில்தான் கெனைக்கிறது என்பதில் ஒரு சந்தோசம், ஆத்மதிருப்தி!!

எனது எழுத்துக்கள் தானே உங்களுக்கு பிடிக்கவில்லை, என்னை ஆதரித்தால் என்னால் முடியும் என்று என் மீது நம்பிக்கை வைத்தோ அல்ல உண்மையிலேயே அவர்களுக்கு எனது எழுத்துக்கள் பிடித்து போயோ இருக்கும் பட்சத்தில் அந்த நண்பர்கள் மீது உங்களுக்கு ஏன் கோவம் ? அவர்களை எதற்கு ஏளனப்படுத்தவேண்டும் ? இது சரியா ?
உங்களுக்கு உண்மையிலேயே எனது எழுத்துக்கள் தான் பிடிக்கவில்லையா ? 
இல்லை நானா ?

Onnu olunga kavithai elutha try pannu.. ille nalla kavithai eluthi palagara varaikkum publish pannatha.. sathiyama solren ennalaye thaanga mudiyala..

சரி அய்யா, இதற்க்கு பிறகு புதிதாக எழுதும்போது கண்டிப்பாக முயற்சி செய்கிறேன். ஆனால் முன்பே எழுதி வைத்திருப்பதை, நண்பர்களிடமும், மற்றோரிடமும் பகிர்ந்து கொள்ளலாம் என்பதால் தானே இடுகைகளாக பதிவுசெய்கிறேன். அந்த எழுத்துக்களை மாற்றி தான் பிரசுரிக்க வேண்டும் என்றால், அதன் உண்மைத்தன்மை சிதைந்து விடாதா? 
சத்தியமாக உங்களால் தாங்க முடியவில்லை என்றால் தமிழ்மணம்.நெட் தளத்திற்கு சென்று பிற நல்ல அருமையான "கவிதைகளை" வாசிக்கலாமே !

ethachum olaruna thaan athukku peru kavithai nu onakku evan da solli koduthaan?? mothala avana kaatra.. avana thookkuren da..

உளறினால் தான் அது கவிதை என்று யாரும் சொல்லிக்கொடுக்கவில்லை. உலருவதற்கு எவரும் சொல்லிக்கொடுக்க தேவையும் இல்லை !
எனது உளறல்கள் தான் கவிதைகள் என்று நான் சொல்லிக்கொள்ளவில்லை என்று மேலே நான் கூறிவிட்டேன். 
இருப்பினும் இந்த உளறல்களும், கிறுக்கல்களும் எனக்கு  முகம் தெரிந்த மற்றும் தெரியாத சில நண்பர்களுக்கு பிடித்து இருக்கிறதே, அவர்களுக்காக எழுதியதை பிரசுரிக்கிறேன். மேலும் எங்கோ இருக்கும் என்னவளுக்கு இந்த உளறல்கள் கவிதைகளாகக்கூட விளங்கலாமே ! அவளுக்காக எழுதினேன், பிரசுரிக்கிறேன் என்று எடுத்துக்கொள்ளுங்கள். 

itha padichapuramaachu thirunthu da.. illa naane unna vittu veliya vanthu unna kolai panniruven.. jaakirathai..

ஆம், நான் பயந்து விட்டேன் என்று சொல்லிவிடலாமா ?
எனது எழுத்துக்களை தொடர்ந்து வாசிக்கும் நண்பர்களே, உங்களுக்கு என் எழுத்துக்கள் மீது அவ்வளவு பிடிப்பு இல்லாவிட்டாலும் பரவாயில்லை, இந்த விமர்சன கடிதத்தின் தன்மைக்கு நான் எழுதிய பதில்கள் சரியென்று தாங்கள் கருதுகிறீர்களா ?

அந்த பக்குவப்படாத சிறு மாணவனின் எழுத்துக்களை அல்லது உளறல்களை அவனது டைரியிலேயே புதைத்து விடலாமா ???
- அரவிந்த் நாராயணன்


Thursday, March 25, 2010

காதலுக்காக


என் காதலுக்கு ஒரு
பெண்மையை தேடினேன் 
அந்த தென்றல் தரகன் கொடுத்த 
முகவரியில் தான் தெரிந்தது 
என் மனதை மையம் 
கொண்டு இருக்கும் 
அந்த புயல் நீ தான் என்று !
- அரவிந்த் நாராயணன்


Saturday, March 20, 2010

வாழ்க்கை


வாழ்க்கை -                                                             
வாழத் தெரிந்தவனுக்கு 
அது ஒரு கவிதை 
நான் கவிஞனாக 
இருக்க விரும்புகிறேன் 
உன்னை கவிதையாக 
எழுதுவதற்கு 
காதலெனும் எழுதுகோலைத் 
தருகிறாயா ?
- அரவிந்த் நாராயணன்


Thursday, March 18, 2010

தண்டவாளம்


உன்னை என்னிடம் 

இணைப்பதற்கு 

அதிவிரைவில் இறுதி வரை 

ஓடி வந்த பிறகும் 

இணையாமலே பிரிந்து நிற்கும் 

இரு கோடுகள் !
- அரவிந்த் நாராயணன்


Tuesday, March 16, 2010

முதல் முத்தம்


எதையும் முதலில் சகித்துக் கொள்ள 
முடியாத மனித இனம் - முதலில் 
அனுபவிக்கத் துடிப்பது 
இந்த ஒரு உன்னத உணர்ச்சிக்குத்தான் !

கருவறையை பிரிய மனமின்றி 
சிணுங்கும் அந்த ஆண்மை 
சாக்கடைச் சுவாசங்களை உள்ளிழுக்க - மறுத்து 
கதறும் அவனது மனம்
முதன் முதலில் சலவை செய்து கொள்ள 
ஏங்குவது - அவளது முதல் முத்தத்திற்கே 

இவை வெறும் உணர்ச்சிகள் அல்ல 
சுவாசங்களின் பரிமாற்றம் !
- அரவிந்த் நாராயணன்


Monday, March 15, 2010

தூறல் நேரங்களில் . . .


ஒரு மழை வாசத்தில் 
சற்றே உதிக்கும் அந்த வானவில் கூட 
ஏழு நிறங்களில் ஒன்றாய்த் தானடா 
வளைந்து செல்கிறது !

தவத்தின் புண்ணியத்தில் 
மனிதப் பிறவி கொண்ட 
உனக்கு மட்டும் ஏன் 
இத்தனை நிறங்களில் ஜாதிகள் ?
- அரவிந்த் நாராயணன்


Saturday, March 13, 2010

கனவோடு நிஜமாக


ஏனோ தெரியவில்லை 
உன் நினைவுகள் மட்டுமே 
என் இரவுகளில் சங்கமிக்கின்றன !

அதில் நாம் சந்தித்திருந்த 
பசுமையான பாலைகளும் 
நம்மோடு உறவாடிய 
சுகமான தென்றல்களும்
நிழலிலிருந்து நிஜமேடுத்து 
வியாபிக்கின்றன !

சட்டென எழுந்தேன் 
பல மின்னல்கள் பாய்ந்த உணர்ச்சி !

அப்பொழுது தான் புரிந்தது 
என் கனவில் நீ 
புன்னகைத்தது !
- அரவிந்த் நாராயணன்


Wednesday, March 10, 2010

நகம்


செத்துப்போன செல்களை 

அழகென்று வளர்க்கிறாய் 

உனக்காக வாழும் என்னை 

அசிங்கம் என கொன்றுவிட்டு ~!


- அரவிந்த் நாராயணன்


இப்படிக்கு


இந்த நூறாவது கடிதத்தை 

என் கண்ணீரில் நனைத்து 

கொடுக்கிறேன் என் அன்பே ! ஏனெனில் 

கிழிக்கும் போது கூட 

உன் விரல்கள் வலித்து விடக்கூடாது !!!

- அரவிந்த் நாராயணன்


Monday, March 8, 2010

வைகறைத் தூறல்


மதியின் பிரிவிற்காக 

கண்ணீர் விடக் காத்திருக்கும் 

வான் நதியைக் கண்டு 

வாடுகிறது இந்த பூமித்தாமரை ~! ! !~


- அரவிந்த் நாராயணன்


எதிர்ப்பார்ப்பு : நான் எழுதியதில் என்னைக்கவர்ந்த வரிகள் இவை. உங்களது கருத்துக்களுடன் சிறு உரையாட ஆசை. விமர்சியுங்களேன் ! உங்களது விமர்சனங்களே என் பேனாவின் மை !


Sunday, March 7, 2010

குறி


 என் வானவில்லே !

உன்னை என் மனதில் வட்டமிட்டேன் 

ஆனால், நீயோ அதை 

அம்பெய்த குறிபார்த்துவிட்டாயே !


- அரவிந்த் நாராயணன்


Saturday, March 6, 2010

அழுகை

 

அலைகள் மோதுகின்றன என்பதற்காக 

பாறைகள் அழவில்லை 

ஜன்னல்கள் தடுக்கின்றன என்பதற்காக

தென்றலும் அழவில்லை 

முகில்கள் மறைக்கின்றன என்பதற்காக 

ஆதவனும் அழவில்லை 

நண்பா ! பிறகு அவள் என்ன கூறிவிட்டால் 

என்று நீ மட்டும் அழுது கொண்டே இருக்கிறாய் ?

- அரவிந்த் நாராயணன் 


Friday, March 5, 2010

விடுதலை

 

உன் வீட்டு அஞ்சல் பெட்டியில் 

என் கடிதங்கள் 

மூர்ச்சையடைத்து கிடக்கின்றன 

சீக்கிரம் அதற்காவது 

விடுதலை கொடு !

- அரவிந்த் நாராயணன் 


Wednesday, February 17, 2010

சின்னம்

 

காதல் எங்குள்ளது என்று கேட்டால் ?

இதயம் என்கிறான் !

அந்த இதயத்தையே அம்பெய்தி கொன்றுவிட்டு 

பின்பு காதலை இவன் எங்கிருந்து 

உணரப் போகிறான் ! 

- அரவிந்த்


Tuesday, February 16, 2010

காதலர் தினம்


காதலர் தினம் என்றால் அன்று மட்டும் தான் காதலிப்பீர்களா ?
அல்ல
அன்று மட்டும் தான் அன்பு பாராட்டுவீர்களா ?

என்று கேட்பதோ / சொல்வதோ அறியாமை.

நாம் என்ன பொங்கல் அன்று மட்டும் தான் பொங்கல் சாப்பிடுகிறோமா ?
அல்ல 
தீபாவளி அன்று மட்டும் தான் விளக்கேற்றுகிறோமா ?

அவ்வளவு ஏன் ... 
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருப்பதாக 'கூறப்படும்' 
அந்த கடவுளுக்கே !
பொதுவாக சிறப்பிப்பதர்க்கு கோவில்கள் தேவைப்படுமாயின் 
அந்த கடவுளுக்கே !
உருவமும், பெயரும் கொடுத்த 
இந்த மனிதர்களின் உயரிய உன்னத உணர்ச்சியான "காதலுக்கு" !

ஏன் சிறப்பிக்க ஒரு நாள் இருக்கக்கூடாது ?
- அரவிந்த்


அழகு

 

ஆணுக்கு அழகு வீரம் என்றார்கள் 

பெண்ணுக்கு அழகு நாணம் என்றார்கள் 

மதிக்கு அழகு வெண்மை என்றார்கள் 

அன்னத்திற்கு அழகு நடை என்றார்கள் 

ஆதவனுக்கு அழகு ஒளி என்றார்கள் 

உறவினுள் அழகு தாய்மை என்றார்கள் 

இந்த காதலுக்கு அழகு தான் என்ன ?

                . . . . . . . தெய்வீகம் தானோ !

- அரவிந்த்


Sunday, February 14, 2010

விழியின் வழியாக


உன் மிசைல் பார்வையில் 

என் இதயம் அணுகுண்டைப் 

போல் வெடித்துச்சிதறுகிறது 

மீண்டுமா ஒரு வெடிப்புன்னகை ?

ஏவுகனையாகிவிட்ட என் மனம் 

உன்னையே சுற்றுகிறது 

செயர்க்கைக்கொளாக . . . 
- அரவிந்த்


Saturday, February 13, 2010

கலியுகக் காதல்

 

உன் காதலுக்கு

நிலவைத் தூது விடுகிறாயே 

உன் காதல் 

என்ன நிலவைப் போல் 

வெண்மையானதா ? அல்ல தூது விட 

உன் காதல் 

என்ன தெய்வீகமானதா ?


- அரவிந்த்


Wednesday, February 10, 2010

பிரிவு

 

உன் காதலியின் பிரிவைத் 

தாங்க முடியாமல் தானா ?

உன் முகத்தை மேகத்தினுள் 

மறைத்துக் கொள்கிறாய் ?

- அரவிந்த்


Tuesday, February 9, 2010

தேய்பிறை

 

இக்கலியுகத்தில் 

தெய்வீகக்காதலைக்

காண முடியாததை 

எண்ணியா ? நீ 

நாளும் 

தேய்ந்து கொண்டிருக்கிறாய் ?

- அரவிந்த்


நிலா

 

சிற்பி சிலைகளை செதுக்குகிறான் 

அவனுக்கு சன்மானம் கிடைக்கிறது 

ஓவியன் ஓவியத்தை தீட்டுகிறான் 

அவனுக்கு புகழ்மாலை கிடைக்கிறது 

கவிஞன் கவிதைகளை படைக்கிறான் 

அவனுக்கோ பொற்காசுகள் கிடைக்கிறது 

நீ ... காதலுக்கு தூது போகிறாயே 

உனக்கு கிடைத்தது என்ன ?

                                                                      வெறும் தேய்மானம் தானோ ? . . .

- அரவிந்த்


Sunday, February 7, 2010

நட்பு எனப்படுவது யாதெனில் ?

 

முகங்கள் 'தேவையில்லை'

  மனங்களே போதும் 

வயது ஒரு 'பொருட்டில்லை'

புரிதலே போதும் 

அந்தஸ்து 'அவசியமில்லை'

பாகுபாடற்ற உள்ளமே போதும் 

பாலின வித்தியாசம் ஒரு 'தடையில்லை'

கரையற்ற எண்ணங்களே போதும் 

இன்பத்தில் நட்புக்கு ஏதும் 'நிகரில்லை'

துன்பத்தில் அதன் பிரிவைப்போல் 'ஏதொன்றுமில்லை' !

- அரவிந்த்


Saturday, February 6, 2010

தாய்


 

 குப்பையிலும் மாணிக்கம் உண்டு 

என்ற போது நான் நம்பவில்லை !

ஆனால் உன் மூலம் அறிந்து கொண்டேன் 

பெண்களிலும் தெய்வம் உண்டு என்று !

- அரவிந்த்


Friday, February 5, 2010

பெண்


 

சிற்பி செதுக்கிய 
                                             ஓர் அழகிய சிற்பம் !

ஓவியன் வரைந்த 
                                                 ஓர்  அற்புத ஓவியம் !

கவிஞன் எழுதிய 
                                                      ஓர் இலக்கிய காவியம் !

இயற்கை உருவாக்கிய 
                                                     ஓர் உன்னத பாலினம் !

- அரவிந்த்


பெண்ணிடம்


 

அன்பின் உறைவிடம் !

கற்பின் போக்கிடம் !

பாசத்தின் முடிவிடம் !

நாணத்தின் புகலிடம் !
- அரவிந்த்


தீபம்


 

சொர்கத்துக்கு வழிகாட்டும் 

ஒரு தங்க வழிகாட்டி 

இருள்களை விளக்கிவிடும் 

திருட நினைத்தால் சுட்டுவிடும் !

- அரவிந்த்


Thursday, February 4, 2010

பனித்துளி


 

ஊரெல்லாம் விழுந்து கிடக்கும் 

"இரத்தினக் கற்கள்"

கையினில் அல்லவியலாது 

விழிகளில் ரசிக்கத்தான் முடியும் 

அணிகலனாக உடுத்தவியலாது 

சீண்டியதும் கரைந்தோடும் !

- அரவிந்த்
-------------------------------------------------------------------------------------
பின் குறிப்பு : நடுங்கிக்கொண்டிருந்த அந்த இருவில், எனது புதிய கேமெராவில் நான் எடுத்த புகைப்படம் அது !


புள்ளி மான்


 

துள்ளி ஓடும் புள்ளி மானே 

வேடன் வில்லில் நீ சிக்கியது ஏனோ ?

துள்ளும் தருணத்தில் கால் தடுக்கியதோ 

ஐயோ ! பாவம் உன் உயிர் பிரிந்தனவோ !

- அரவிந்த்


Wednesday, February 3, 2010

கதிரவக் காதல்



வைகறையில்,                                                             

உறங்கும் காதலியை தன் ஒளிக் 

கரங்களால் சீண்டினான் காதலன் 

விரிந்து மலர்ந்து இவளும் புன்னகைத்தால் 

நாள் முழுவதும் இன்பமே இவர்களுக்கு 

தூது போனது !                                                 


மாலையில்,                                                                   

தங்கள் பிரிவைத் தாங்க முடியாது 

அழுததின் விளைவு அவள் வாடினால் 

இவன் முகம் சிவந்தது, வாடிய அவள் 

உதிர்வதைக் கண்டு தானும் மறைந்தான் 

இருளும் சூழ்ந்தது !                                            
- அரவிந்த்


Tuesday, February 2, 2010

மழைத்துளி


 

மேகம் கொடுக்கும் 

வெள்ளிப் பஸ்பம் 

வீதியில் விழுந்தால் 

தங்கப் பஸ்பம் !

- அரவிந்த்


Monday, February 1, 2010

துன்பமே தொலைந்து போ


ஏ துன்பமே !                                              

புயலாக வந்து மீனவர்களை வருத்துகிறாய் 

மழையாக வந்து ஏழைகளை அழவைக்கிறாய் 

வறுமையாக வந்து பாமரனை கலைக்கிறாய் 

நோயாக வந்து செல்வந்தனையும் கெடுக்கிறாய் 

இன்னும் நீ யாரை எதிர் பார்க்கிறாய் 

இனியும் இராதே ! தொலைந்து போ !

- அரவிந்த்


ரோஜா



இரவிவர்மன் செய்த 

ஓவியப் பிழைதானோ ?

உன்னோடு பிறந்த 

துளைக்கும் முட்கள் !
- அரவிந்த்


Sunday, January 31, 2010

ஏமாற்றம்



தோன்றும் கற்களெல்லாம் சிலையாவதில்லை

மலரும் மலர்களெல்லாம் மனம் வீசுவதில்லை 

வீசும் காற்றெல்லாம் தென்றலாவதுமில்லை

மின்னும் பொருளெல்லாம் இரத்தினமாவதுமில்லை 

நண்பா !     பிறகு நீ மட்டும் ஏன் 

பார்க்கும் பெண்கள் அனைவரும் 

அவளைப் போல் ஏமாற்றுபவர்கள் 

என்றே நினைக்கிறாய் ?


- அரவிந்த்


Saturday, January 30, 2010

இன்றைய சமுதாயம்

 

 

நெசவும் சேலைகள் எல்லாம் பெண்களுக்கில்லை 
பாசம் காட்டுபவர் எல்லாம் தாயுமில்லை 
பிறக்கும் மனிதர் எல்லாம் நல்லவராவதுமில்லை 
படித்த மாணவருக்கு எல்லாம் வேலை கிடைதுவிடுவதுமில்லை 

- அரவிந்த்


சொந்தங்கள்



எமன் வந்தான் என் தந்தையை தேடி

என் சொத்துக்களை பிடுங்க வந்தன சொந்தங்கள் ஓடி

ஊரெங்கும் சுற்றினேன் ஒரு வேலையை தேடி

கிடைக்காமல் செய்து விட்டது காலக்கண்ணாடி

இலாட்டரியில் எனக்கு விழுந்ததோ ஒரு கோடி

சொந்தங்கள் வந்தன என் கால்களை தேடி !!!

- அரவிந்த் 


அம்மா




உன்னை மலர் என்று கூறவா ?
     வேண்டாம் அது வண்டுகளுக்கே சொந்தம் 

உன்னை தென்றல் என்று கூறவா ?
     வேண்டாம் அது எல்லோருக்கும் சொந்தம் 

உன்னை வண்ணநிலவு என்று கூறவா ?
     வேண்டாம் அது நீலவானுக்கே சொந்தம் 

உன்னை அலைகள் என்றுதான் கூறவா ?
     வேண்டாம் அது கடலுக்கே சொந்தம் 

உன்னை என் உயிர் என்றுதான் கூறுவேன் 
     ஏனெனில் அது எனக்கு மட்டுமே சொந்தம் !!!

- அரவிந்த்